Script

Saturday, December 18, 2010

ஈழத்தின் ஓலம்



வண்டுகளின் ரீங்காரம் 
நின்று போனது !!

வாண்டுகளோ  புன்னகையை
மறந்து போனது!!

மகரந்த சேர்க்கையின்றி
மரங்களெல்லாம் மலடாகிபோனது!!

இரத்தச் சேற்றை  உழுவதற்கு
நேச நாடுகளின் இலவச
வேளான்மை  கருவிகள்
வெட்ககேடு !!

வற்றிய விழிகளோடும்
தொற்றிய வியாதிகளோடும்
எம்மக்கள் முகாமில் வதைபட - தமிழில்
தேசிய கீதம் பாடவேண்டுமென
தேசம்  கடந்து
வேசதாரிகள் கண்டனக்குரல்
கொடுக்கிறார்கள்!!

Photo Courtesy: www.omiusajpic.org

No comments:

Post a Comment